மில்லர் முதல் சர்பராஸ் வரை: ஐபிஎல் மினி ஏலத்தில் அடிப்படை தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்

மில்லர் முதல் சர்பராஸ் வரை: ஐபிஎல் மினி ஏலத்தில் அடிப்படை தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்


 

சென்னை: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் 77 வீரர்களை 10 ஐபிஎல் அணிகளும் வாங்கி இருந்தன. இதில் சில வீரர்களை அடிப்படை தொகைக்கே அணிகள் வாங்கின.


இந்தப் பட்டியலில் சில முக்கிய வீரர்களும் அடங்குவர். அந்த வகையில் இது ஐபிஎல் அணிகளுக்கு அடித்த ஜாக்பாட் என்றும் சொல்லலாம்.


டெல்லி கேபிடல்ஸ் அணி, கைல் ஜேமிசன், இங்கிடி, பென் டக்கெட், டேவிட் மில்லர், பிரித்வி ஷா ஆகியோரை அவர்களை அடிப்படை தொகைக்கு வாங்கியது. இவர்களில் மில்லர், இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி எதிரணியை அச்சுறுத்தும் திறன் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


குஜராத் டைட்டன்ஸ் அணி, டாம் பேன்டன், லூக் வுட், பிரித்விராஜ் யர்ராவை அடிப்படை தொகைக்கு வாங்கி இருந்தது. கொல்கத்தா அணியில் ஃபின் ஆலன், டிம் செய்ஃபெர்ட், ஆகாஷ் தீப், ராகுல் திரிபாதி, பிரஷாந்த் சோலங்கி, கார்த்திக் தியாகி ஆகியோர் அடிப்படை தொகைக்கு ஒப்பந்தம் செய்தது.


லக்னோவில் நோர்க்யா, வனிந்து ஹசரங்கா அடிப்படை தொகைக்கு வாங்கப்பட்டனர். மும்பை அணி இந்த ஏலத்தில் டிகாக், மயங்க் ராவத், அதர்வா அன்கோல்கர், முகமது இஸார், டேனிஷ் மேல்வர் ஆகியோரை வாங்கியது. இவர்கள் ஐவரும் அடிப்படை தொகைக்கு அந்த அணி ஒப்பந்தம் செய்தது.


பஞ்சாப் கிங்ஸ் அணியில் விஷால் நிஷாத், பிரவீன் துபே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் குல்தீப் சென், பிரிஜேஷ் சர்மா, அமன் ராவ், விக்னேஷ் புதூர், யாஷ் ராஜ் ஆகியோரும், ஆர்சிபி அணியில் ஜேக்கப் டஃபி, ஜோர்டன் காக்ஸ், கனிஷ்க் சவுகான், விஹான் மல்ஹோத்ரா, விக்கி ஓஸ்ட்வால், சாத்விகே தேஸ்வால் ஆகியரையும், ஹைதராபாத் அணி சிவம் மாவி, கிரைன்ஸ், அமித் குமார், ஷாகிப் ஹுசைன், ஷிவாங் குமார் ஆகியோர் அடிப்படை தொகைக்கு ஒப்பந்தம் செய்தது.


நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி, மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹோசைன், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மேத்யூ ஷார்ட், நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ஸாக் பவுல்க்ஸ், இந்திய பேட்ஸ்மேன் சர்ஃபராஸ் கான் உள்ளிட்டோரை அடிப்படை தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.


இரட்டை சதம் விளாசி அபிக்யான் குண்டு சாதனை!

 

துபாய்: யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று மலேசியாவுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 408 ரன்கள் குவித்தது.


விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேனான அபிக்யான் குண்டு இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். அதிரடியாக விளையாடிய அபிக்யான் குண்டு 125 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 209 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.


இதன் மூலம் இளையோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அபிக்யான் படைத்தார். தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் வேதாந்த் திரிவேதி 106 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 90 ரன்களும் சேர்த்தனர். 409 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மலேசியா அணி 32.1 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


இந்திய அணி தரப்பில் மித வேகப்பந்து வீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். 315 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி தனது பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது.


2-வது வீரர்: யு-19 ஆசிய கோப்பை தொடரில் மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அபிக்யான் குண்டு 209 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உலக அரங்கில் யு-19 மட்டத்தில் இரட்டை சதம் விளாசிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அபிக்யான். இதற்கு முன்னர் ஜிம்பாப் வேக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் ஜோரிச் வான் ஷால்க்விக் 215 ரன்கள் விளாசியிருந்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%