ரஷிய அதிபர் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை! - உக்ரைன்
Dec 31 2025
15
ரஷியாவில் விளாதிமீர் புதின் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் மீது ரஷிய அரசு திங்கள்கிழமை(டிச. 29) இரவு சுமத்திய பரபரப்பு குற்றச்சாட்டுகளை உக்ரைன் அரசு நிராகரித்துள்ளது.
இது குறித்து, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு ரஷியாவிலுள்ள அதிபர் விளாதிமீர் புதினின் இல்லத்தை, குறிவைத்து தாக்க, உக்ரைன் முயற்சித்தது. வடக்கு ரஷியாவின் நோவ்கோரோட் பகுதியில் நள்ளிரவில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் உக்ரைன் ராணுவம் 91 நெடுந்தூர ட்ரோன்களைப் பயன்படுத்தியதாகவும், ஆனால் அவையனைத்தும் ரஷிய விமானப் படையால் தகர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தாக்குதல்களில் எந்தவித சேதமோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் ரஷியா தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, உக்ரைன் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரஷிய அதிபர் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் உக்ரைனால் நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?