விடுமுறை தினம்: திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Dec 27 2025
12
திருத்தணி,
கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தொடர் விடுமுறையால் நேற்று திருத்தணி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு குவிந்தனர். இதனால் பக்தர்கள் பொதுவழியில் மூலவரை தரிசிக்க நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அதே போல் ரூ.100 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட்டு பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் மலைப்பாதையில் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்னதாக மார்கழி மாதத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு தனுர் பூஜை, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?