விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்


 

வண்டலூர்: ​விளை​யாட்​டுத் துறை​யில் இந்​தி​யா​வில் முதல் மாநில​மாக தமிழ்​நாட்டை உயர்த்​து​வதே நமது இலக்​காக இருக்க வேண்​டும் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். வண்​டலூர் அருகே மேலக்​கோட்​டையூரில் உள்ள தமிழ்​நாடு உடற்​ப​யிற்சி மற்​றும் விளை​யாட்டு பல்​கலைக்​கழக வளாகத்​தில் ரூ.5 கோடி மதிப்​பில் சர்​வ​தேச தரம் வாய்ந்த நீச்​சல் குளம் கட்​டப்​பட்​டுள்​ளது.


அதே​போன்று அதே வளாகத்​தில் ரூ.2 கோடி மதிப்​பில் மேஜைப்​பந்து விளை​யாட்​டுக்​கான முதன்மை நிலை மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இவற்​றுக்​கான திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. விழாவுக்கு விளை​யாட்டு மற்​றும் இளைஞர் நலத்​துறை செய​லா​ளர் அதுல்ய மிஸ்ரா தலைமை தாங்​கி​னார்.


இந்த நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொண்டு நீச்​சல் குளம் மற்​றும் மேஜைப்​பந்து முதன்மை நிலை மையம் ஆகிய​வற்றை திறந்து வைத்​தார். இதைத் தொடர்ந்து வி.ஐ.டி. பல்​கலைக்​கழக வளாகத்​தில் பேரூ​ராட்​சி, நகராட்​சி, மாநக​ராட்​சிகளில் உள்ள பள்​ளி, கல்​லூரி மாணவர்​களுக்கு விளை​யாட்டு உபகரணங்​கள் வழங்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது.


இதில் கலந்து கொண்டு துணை முதல்​வர் உதயநிதி தாம்​பரம் மாநக​ராட்​சி, மது​ராந்​தகம், செங்​கல்​பட்​டு, மாமல்​லபுரம் நகராட்​சி, திருப்​போரூர், திருக்​கழுகுன்​றம் உள்​ளிட்ட பேரூ​ராட்​சிகளின் மாணவ, மாண​வியருக்கு விளை​யாட்டு உபகரணங்​களை வழங்​கி​னார்.


அப்​போது அவர் பேசி​ய​தாவது: சாதி, மதம், இனம், மொழி, ஈகோ ஆகிய​வற்றை எல்​லாம் தாண்டி நம்மை இணைப்​பது இந்த விளை​யாட்டு ஒன்​று​தான். இதில் சாதித்​தால் நமது மாநிலத்​துக்​கும், நாட்​டுக்​கும் பெருமை சேர்ப்​ப​தோடு, உங்​களுக்​கும் எதிர்​கால வாழ்க்​கைக்கு வளம் சேர்க்​கும். ஏனெனில் நமது அரசு இந்​தி​யா​விலேயே முதன் முறை​யாக மாநில அரசு வேலைகளில் 3 சதவீத இட ஒதுக்​கீட்டை வழங்​கு​கிறது.


இதன் மூலம் கடந்த ஆண்டு 100 பேருக்கு அரசு வேலை கிடைத்​துள்​ளது. இந்த ஆண்​டும் 100 பேருக்கு கிடைக்க உள்​ளது. உங்களுக்கு அனைத்து விதத்திலும் இந்த அரசு துணை நிற்கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.


இந்த நிகழ்ச்​சி​யில், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் உறுப்​பினர் செயலர் ஜெ.மேக​நாதரெட்​டி, அமைச்​சர் தா.மோ.அன்​பரசன், செங்கை ஆட்​சி​யர் சினே​கா, தாம்​பரம் மாநக​ராட்சி ஆணை​யர் பாலச்​சந்​தர், எம்​எல்​ஏக்​கள் எஸ்​.ஆர். ராஜா, இ.கருணாநி​தி, வரலட்​சுமி, உள்​ளாட்சி பிர​தி​நிதி​கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%