குவைத்,
பாகிஸ்தான் அணியிடம் தோல்வி; இந்தியா வெளியேற்றம் கிரிக்கெட் உலகின் அதிவேக தொடராக கருதப் படுவது ஹாங்காங் சிக்ஸஸ் தொடராகும். 6 ஓவர்களைக் கொண்ட இந்த தொடரின் 21ஆவது சீசன் ஹாங்காங்கின் (சீனா) மோங் ஹாக் நகரில் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கியது. இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்தி ரேலியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பாகிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை என 12 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன. 12 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன. இதில் “குரூப் சி” இடம்பெற்றுள்ள இந்திய அணி, நவம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் நூலிழையில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. தொடர்ந்து சனிக்கிழமை அன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, குவைத் அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 2 லீக் போட்டிக ளிலும் தோல்வி அடைந்ததால், ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக் க்கெட் தொடரில் இருந்து 2005இல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்
2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடர் அமெரிக்கா வி4ன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறு கிறது. இந்த ஒலிம்பிக் கில் கிரிக்கெட் (டி-20 வடிவில்) இடம்பெறும் என ஏற்கனவே அறி விக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சார்பில் தலா 6 அணிகள் பங்கேற்கும். இந்த 6 அணிகளும் புள்ளிகள் தரவரிசை பட்டியலில் இருந்து தேர்வாகும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் தற்போது ஒரு கண்டத்திற்கு ஒரு அணி என்ற வகையில் 6 அணிகள் தேர்வு (விதி கள் இன்னும் வெளியாகவில்லை) செய்ய சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிகள் 2028ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என மொத்தமாக 29 போட்டிகள் நடை பெறும். ஒலிம்பிக் வரலாற்றில் 1900ஆம் ஆண்டு கிரிக் கெட் இடம் பிடித்திருந்தது. அதன்பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் தடை செய்யப்பட்டது. இத்தகைய சூழலில் 128 வருடங்கள் கழித்து மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக் கெட் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?