தத்தந் - நாம - வ்யவஹரண - யோக்யா விஜயதே'
-செளந்தர்ய லஹரி
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்'" />
வெக்காளியம்மன்*, உறையூர்
"அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹு நகர -விஸ்தார - விஜயாத்ருவம்
தத்தந் - நாம - வ்யவஹரண - யோக்யா விஜயதே'
-செளந்தர்ய லஹரி
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றார் ஒளவை மூதாட்டி. சில இடங்களில் அம்பிகை வானமே கூரையாகக் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களைக் காக்க அமர்ந்திருக்கிறாள். அப்படி வேண்டும் வரம் அருளும் வெக்காளி அம்மனாக திருச்சி அருகே உறையூரில் கோயில் கொண்டிருக்கிறாள் அம்பிகை.
வெக்காளி அம்மனுக்கு ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் அபிஷேகம் நடைபெறும். ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு பொருள் என்பது இங்கு சிறப்பு. சித்திரையில் மரிக்கொழுந்து, வைகாசியில் சந்தனம், குங்குமம், பச்சைக் கற்பூரம், பன்னீர், ஆனியில் முக்கனி, ஆடியில் பால், ஆவணியில் எள்ளுடன் நாட்டுச் சர்க்கரை, புரட்டாசியில் அப்பம், ஐப்பசியில் அன்னம், கார்த்திகையில் தீபம், மார்கழியில் பசுநெய், தையில் தேன், மாசியில் போர்வை, பங்குனியில் பசுந்தயிர் என்று பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப் படுகின்றன.
கீதா ராஜா சென்னை