tamilnadu epaper

காலை உணவுத் திட்டத்தில் மாற்றம்: உப்புமாவுக்கு பதில் பொங்கல்-சாம்பார்

காலை உணவுத் திட்டத்தில் மாற்றம்: உப்புமாவுக்கு பதில் பொங்கல்-சாம்பார்

தமிழக அரசால் செயல்படுத் தப்படும் காலை உணவுத் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவு அதிகரித்துள்ளது. கற்றல் திறன் மேம் பட்டுள்ளது, உடல் நலம் காக்கப்பட்டுள்ளது என இத்திட்டத்தால் பல பயன்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை யில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை மானியக் கோரிக்கை மீதான விவா தத்துக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கீதாஜீவன், “மகளிர் உரிமைத் தொகை, வீட்டு மனைப் பட்டா, விடியல் பயணம் என்று பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங் களை முதலமைச்சர் செயல்படுத்தி வரு கிறார். மேலும், புதுமைப்பெண் திட்டத்திற்கு இதுவரை 721 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி சீருடைகள் தைக்க தையல் கூலி உயர்த்தி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு எடை குறைவாக உள்ள 92 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு அந்த குழந்தை கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். குழந்தைகள் நல மையங்கள் எல்லாம் ஸ்மார்ட் மையங்களாக மாற்றப்பட்டு வரு கிறது. காலை உணவுத் திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதி கரித்துள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரித்து, குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளனர். வரும் கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில், அரசின் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கல் வழங்கப்படும்” என்றார்.