tamilnadu epaper

சத்​தீஸ்​கரில் 22 மாவோ​யிஸ்ட்​கள் கைது: ஜெலட்​டின் குச்சிகள், வெடிபொருட்​கள் பறி​முதல்

சத்​தீஸ்​கரில் 22 மாவோ​யிஸ்ட்​கள் கைது: ஜெலட்​டின் குச்சிகள், வெடிபொருட்​கள் பறி​முதல்

பீஜப்​பூர்:

சத்தீஸ்கரில் 22 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பீஜப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎப் அமைப்பின் கமாண்டோ பிரிவினர் மற்றும் மாநில போலீஸார் அடங்கிய கூட்டுப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதில் உசூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெக்மெட்லா கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் 7 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர்.


மேலும் ஜங்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெல்சார் கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் இருந்த 6 பேர், நெலஸ்னார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கந்தகர்கா கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் 9 பேர் என மொத்தம் 22 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து டிபன் பாக்ஸ், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், வயர்கள், பேட்டரிகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.