ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகைக்கடனுக்கான புதிய நிபந்தனைகளை ரத்து செய்ய கோரி திமுக விவசாய அணி மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக விவசாய அணி மாநிலச் செயலாளரும், தமிழகஅரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏகேஎஸ். விஜயன் தலைமை வகித்தார்.