சிரியாவின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் வான் வழித்தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. தெற்கு சிரியாவில் உள்ள ராணுவத் தளங்களை அழிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தலைமையிலான சிரியாவின் இடைக்கால அரசாங்கம் இத்தாக்குதல் சிரியாவின் இறையாண்மையை அப்பட்டமாக மீறும் செயல் என இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளது.