போப் பிரான்சிஸ் உடல்நிலைதொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்ப தாக வாடிகன் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வாடி கன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் “போப் பிரான்சிஸ்க்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றது. அவருக்கு ஆரம்பகட்ட சிறுநீரகப் பிரச்சனை இருப்பதும் தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.