போர் நடக்கும் பகுதிகளில் இருந்து விலகி இருக்க சீனா குடிமக்களுக்கு அந்நாட்டின் அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ரஷ்யாவிற்கு ஆதரவாக சீன வீரர்கள் போரிடுவதாகவும் அவர்களில் இருவரை பிடித்துள்ளதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் சீன வீரர்கள் ரஷ்யாவிற்கு ஆதரவாக போராடவில்லை என சீனா தெரிவித்துள்ளது. மேலும் போர் சூழ்ந்துள்ள நகரங்களில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.