tamilnadu epaper

ஆடி மாதம் அம்மன் மாதம்

ஆடி மாதம் அம்மன் மாதம்

கொல்லூர் மூகாம்பிகை*(கர்நாடகா)

 

கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது. சக்தி வாய்ந்த அம்பாள் கோவில்களில் ஒன்று கொல்லூர் மூகாம்பிகை கோவில். இங்கு மூகாம்பிகை சிவசக்தி சொரூபத்தில் காட்சி தருகிறார். மகிஷாசூரனை வதம் செய்த மூகாம்பிகை கோயில் சௌபர்னிகா ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது. அம்மன் ரத்தின கற்களால் ஆன ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார ரூபினியாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

 

இந்த கோவிலில் குடிகொண்டிருக்கும் ஜோதிர்லிங்கத்தில் ஒரு அதிசயம் என்னவென்றால், லிங்கத்தின் மத்தியில் தனித்தன்மை வாய்ந்த அதிசயிக்கத்தக்க தங்க நிற கோடு ஒன்று இருக்கிறது. இது லிங்கத்தை சரிபாதியாக பிரிக்கிறது. லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் போது மட்டும் இது ஒளிரும். அந்த கோடு பிரிப்பதில் லிங்கத்தின் வலது பாதி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரையும், இடது பாதி காளி, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகியோரையும் குறிக்கிறது. இந்த பஞ்சலோக சிலைக்கு ஆதிசங்கரர் அபிஷேகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உடுப்பி, மங்களூரு, பெங்களூருவில் இருந்து இக்கோவிலுக்கு பஸ் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு சாத்தப்படுகிறது. 

 

தேவியின் திருத்தலங்கள் தொடரும்...

 

கீதா ராஜா சென்னை