*மும்பை தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கைக்காக மகாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் அவர்களை ஆளுநர் மாளிகையில் மும்பை விழித்தெழு இயக்கத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்*.
மும்பை மலபார் ஹில்லில் உள்ள ராஜ் பவன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற மும்பை விழித்தெழு இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர் தமிழன், தங்கபாண்டியன், மதன் மற்றும் சைமன் ராஜா ஆகியோர் ஆளுநர் சி .பி. ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து மும்பை தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
*மனுவில் கூறிருப்பது*
*மராட்டிய வாழ் தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை*..
1. 150 வருடங்களாக மராட்டியத்தில் பல தலைமுறையாக வாழும் தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் (மத்திய அரசு பணி மற்றும் கல்வி மேற்படிப்பு க்கு உதவும் ). புலம்பெயர்ந்த மும்பை வாழ் தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டில் வீடு ,நிலம், சொத்து தங்கள் பெயர்களில் மாற்றும்போது வாரிசு சான்றிதழ் பெறுவதில் பல்வேறு சிக்கலை சந்திக்கிறார்கள் இதை எளிமைப்படுத்த வேண்டும்.
2. மராட்டியத்தில் குறிப்பாக மும்பை புதியதாக உருவாகும் தாராவியில் நிலம் ஒதுக்கி தமிழ் இல்லம் ( தமிழ் பவன்) அமைக்க வேண்டும்.
3. மும்பையிலிருந்து தமிழ்நாட்டுக்கு குறிப்பாக மும்பை -ராமேஸ்வரம்; மும்பை -கன்னியாகுமரி; மும்பை -தென்காசி க்கு ரயில் கிடையாது.. இந்தவழிதட்டத்தில் ரயில் இயக்க வேண்டும். ராஜ்தானி ,கரிப்ரத், வந்தே பரத் போன்ற அதிவேக குளிர்வசதி கொண்ட
ரயில்கள் இல்லை .அனைத்து வசதிகள் கொண்ட ரயில் இயக்க வேண்டும்.
4. தாராவி ,ஆரே காலனி, ரே ரோடு & சேவ்ரி, மலாடு, முலுண்ட் & பாண்டுப், செம்பூர் போன்ற பகுதிகளில் வளர்ச்சித்திட்டம் மேற்கொள்ளும்போது பல தலைமுறையாக வாழும் தகுதிவாய்ந்த புலம்பெயர்ந்த (தமிழ் ) மக்களை வேற இடங்களுக்கு இடமாற்றம் செய்யாமல் நிரந்தர
வீடுகள், கடைகள் வழங்கி வாழ்வாதாரத்தை
உறுதிப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைத்து ஆளுநரிடம் விளக்கினார்.
கோரிக்கைகை கேட்டுக்கொண்ட ஆளுநர் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றித்தருவதாக தெரிவித்தார்.