கீவ், பிப். 24–
உக்ரைனில் அமைதி நிலவ என் பதவியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். கடந்த, 2022 பிப்ரவரி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், போர் நீடித்து வருகிறது. இந்தப் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. தற்போது போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது. இதற்கிடையே, ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரி. இவர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக விட மாட்டார்', என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் நிருபர்கள் சந்திப்பில் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றால் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மிகவும் தேவை. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே டிரம்ப் மத்தியஸ்தராக இருக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.