tamilnadu epaper

உத்தர பிரதேச கங்கை விரைவுச் சாலையில் ரஃபேல், சுகோய் உட்பட போர் விமானங்கள் தீவிர பயிற்சி

உத்தர பிரதேச கங்கை விரைவுச் சாலையில் ரஃபேல், சுகோய் உட்பட போர் விமானங்கள் தீவிர பயிற்சி

லக்னோ:

பஹல்காம் தாக்குதலை அடுத்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஹரி​யா​னா​வின் அம்​பாலா, மேற்​கு ​வங்​கத்​தின் ஹசி​மாரா பகு​தி​யில் உள்ள இந்​திய விமானப் படை தளங்​கள் சார்​பில், ‘ஆபரேசன் ஆக்​ரமன்’ என்ற பெயரில் கடந்த ஒரு வாரத்​துக்​கும் மேலாக போர் பயிற்சி நடை​பெற்று வரு​கிறது. இதில் ரஃபேல் உள்​ளிட்ட போர் விமானங்​கள் பங்​கேற்று உள்​ளன.


போர் பயிற்​சி​யின் ஒரு பகு​தி​யாக உத்தர பிரதேசத்​தின் கங்கை விரைவுச் சாலை​யில் ரஃபேல், சுகோய், மிராஜ் உள்​ளிட்ட போர் விமானங்​கள் நேற்று தரை​யிறங்​கின. பின்​னர் அங்​கிருந்து சீறிப் பாய்ந்து மேலெழுந்து சென்​றன. உ.பி.யின் மீரட், பிர​யாக்​ராஜை இணைக்​கும் வகை​யில் 1,047 கி.மீ. தொலை​வுக்கு கங்கை விரைவுச் சாலை அமைக்​கப்​பட்டு உள்​ளது.


போர் உள்​ளிட்ட அவசர காலங்​களை கருத்​தில் கொண்டு இந்த சாலை​யில் ஷாஜ​கான்​பூர் மாவட்ட எல்​லைப் பகு​தி​யில் 3.5 கி.மீ. தொலை​வுக்கு போர் விமானங்​கள் தரை​யிறங்க சிறப்பு ஓடு​தளம் அமைக்​கப்​பட்​டிருக்​கிறது.


இந்த ஓடு​தளத்​தில் இந்​திய விமானப்​படை​யின் மிகப்​பெரிய சரக்கு விமான​மான சி-130ஜே சூப்​பர் ஹெர்​குலிஸ் என்ற ஜம்போ விமானம் நேற்று தரை​யிறங்​கியது. ரஃபேல், சுகோய், ஜாகு​வார், மிக் ரக போர் விமானங்​களும் ஓடு​தளத்​தில் அடுத்​தடுத்து தரை​யிறங்​கின. சுமார் 16-க்​கும் மேற்​பட்ட போர் விமானங்​கள் கங்கை விரைவுச் சாலை​யில் தரை​யை தொடுவதுபோல் கீழிறங்கி, மேலெழுந்து சென்​றன.


இதுகுறித்து விமானப்​படை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: உத்தர பிரதேசத்​தின் பரேலி​யில் இந்​திய விமானப்​படைத் தளம் உள்​ளது. இங்கு சுகோய் போர் விமானங்​கள், துருவ் ஹெலி​காப்​டர்​கள் நிறுத்​தப்​பட்டு உள்​ளன. அவசர காலங்​களை கருத்​தில் கொண்டு உத்தர பிரதேசத்​தின் கங்கை விரைவுச் சாலை, யமுனை விரைவுச் சாலை, ஆக்ரா விரைவுச் சாலை, பூர்​வாஞ்​சல் விரைவுச் சாலை என 4 சாலைகளில் போர் விமானங்​கள் தரை​யிறங்​கு​வதற்​கான ஓடு​தளங்​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளன.


இதில் கங்கை விரைவுச் சாலை​யின் ஓடு​தளத்​தில் போர் விமானங்​களை தரை​யிறக்கி தீவிர பயிற்​சியை நடத்​தினோம். இரவிலும் இந்த சாலை​யில் போர் விமானங்​களை தரை​யிறக்கி சோதனை நடத்​தினோம். ஓடு​தளத்​தின் அரு​கிலேயே மருத்​து​வ​மனை, எரிபொருள் நிரப்​பும் நிலை​யம் உள்​ளிட்ட அனைத்து வசதி​களும் உள்​ளன. போர்க்​காலத்​தில் உ.பி.யின் 4 விரைவுச் சாலைகளும் விமானப்படைத் தளங்​களாக மாறி​விடும். இவ்​வாறு விமானப்​படை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.