tamilnadu epaper

கல்லூரியின் கடைசி நாளில்

கல்லூரியின்  கடைசி நாளில்


கல்லூரியின்

கடைசி நாளில்...

விடை பெற்றேன்

அவளிடம்... !

மனதில்

சுமந்த

ஒரு தலை

காதலோடு... !


இரயில் நிலையத்தில்...

என் பிறப்பிடம் செல்ல காத்திருக்கையில்....

அவள் ஏதோ சொல்ல ஓடி வருவது தெரிந்தது.....


மலர்ந்த முகத்தோடு...

அவளை எதிர்கொண்டேன் ....

காதலை சொல்ல வந்திருப்பாளோ....


" .என்னிடம் இருந்து திருடி கொண்டு போகிறாயே... !"


என்றாள் ....


(இதயத்தை சொல்கிறாளோ என்று நினைத்தேன்... )


"செல்போன் சார்ஜ்ர் வாங்கினால் திருப்பி தர மாட்டியா ... !"


என்று கோபித்தபடி சார்ஜரை திரும்ப வாங்கிக் கொண்டு நடந்தாள்.... என் இதயத்தின் சார்ஜர் மெதுவாய் இறங்கிக் கொண்டிருந்தது.... !



எம்.பி.தினேஷ்.

கோவை - 25