கல்லூரியின்
கடைசி நாளில்...
விடை பெற்றேன்
அவளிடம்... !
மனதில்
சுமந்த
ஒரு தலை
காதலோடு... !
இரயில் நிலையத்தில்...
என் பிறப்பிடம் செல்ல காத்திருக்கையில்....
அவள் ஏதோ சொல்ல ஓடி வருவது தெரிந்தது.....
மலர்ந்த முகத்தோடு...
அவளை எதிர்கொண்டேன் ....
காதலை சொல்ல வந்திருப்பாளோ....
" .என்னிடம் இருந்து திருடி கொண்டு போகிறாயே... !"
என்றாள் ....
(இதயத்தை சொல்கிறாளோ என்று நினைத்தேன்... )
"செல்போன் சார்ஜ்ர் வாங்கினால் திருப்பி தர மாட்டியா ... !"
என்று கோபித்தபடி சார்ஜரை திரும்ப வாங்கிக் கொண்டு நடந்தாள்.... என் இதயத்தின் சார்ஜர் மெதுவாய் இறங்கிக் கொண்டிருந்தது.... !
எம்.பி.தினேஷ்.
கோவை - 25