தமிழரின்
தலைசிறந்த
தின் பண்டங்களில்
பலருக்கும்
தலையாயது
கடலை மிட்டாய்...
ஆண் --பெண்
சிறுவர் -- பெரியவர்
ஏழை -- பணக்காரர்
என்ற பேதம்
எதுவுமில்லாமல்
எல்லோரும்
விரும்பி உண்ணும்
உயர் வகை பண்டம்
கடலை மிட்டாய்.
எளிமை இனிமை
ஏற்றமிகு சத்துக்கு
உத்தரவாதம் அளிப்பதில்
பிசிறு இல்லா
பிரசித்தம்...
தின்பண்ட ராஜ்ஜியத்தில்
சிற்றரசன் தான்
என்றாலும்
கடுகு சிறுத்தாலும்
காரம் குறையாத
கம்பீர ராஜன்...
சைவம் அசைவம்
எதுவானாலும்
கடைசியில்
கடலை மிட்டாயை
சுவைத்துத் தின்று
ஜன கண மன
பாடும் போது தான்
சாப்பிட்ட சொர்க்கம்
சித்திக்கும் சிலருக்கு..
ஆயுர்வேதம் முதல்
அலோபதி வரை
அனைத்து மருத்துவமும்
தடை அணை போடாமல்
தாராளமாய் அனுமதிக்கும்
அக்மார்க் பண்டம்...
கடலை மிட்டாயால்
கோவில் பட்டிக்கு
குவலயமே
கேள்விப்பட்ட பெருமை
குடும்பத்தின்
கடைசி கல்யாணத்தின்
கனிவான
தாம்பூலக் கவர்
அடையாளம்
கடலை மிட்டாய்!
நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்