tamilnadu epaper

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 102 திருக்குறள் கலைஞர் உரை நூலை இலவசமாக வழங்கிய திமுகவினர்

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 102 திருக்குறள் கலைஞர் உரை நூலை இலவசமாக வழங்கிய திமுகவினர்

கோவில்பட்டியில்,

கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 102 திருக்குறள் கலைஞர் உரை நூலை இலவசமாக வழங்கிய திமுகவினர்.


தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102 - வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

செம்மொழி நாளாக கொண்டாடப்படும் இந்நாளில் திமுகவினர் உற்சாகமாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் தலைமையில், 22 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி ஏற்பாட்டில் பங்களா தெருவில் அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி 102 திருக்குறள் கலைஞர் உரை நூலை இலவசமாக வழங்கினர்.