திருவண்ணாமலை மாவட்டம் ஜூன் 3 கீழ்பென்னாத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் கல்வி உபகரணங்கள் மாண்புமிகு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள் வழங்கினார்கள். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சி. கே பன்னீர்செல்வம், வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீராமுலு, ப. மே. கு. தலைவர் அம்பிகா ராமதாஸ், வார்டு கவுன்சிலர் பாக்யராஜ், உதவி தலைமை ஆசிரியர்கள் ஏழுமலை,குமரேசன், மரிய செல்வி,மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை