tamilnadu epaper

மேல தாளங்களுடன் அழைத்து வரப்பட்ட மாணவர்கள்

மேல தாளங்களுடன் அழைத்து வரப்பட்ட மாணவர்கள்

தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த பெத்தநாயக்கனூர் அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த 33 மாணவர்கள் என 63 பேர், பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.அவர்களை அரசு தொடக்கப் பள்ளியிலிருந்து ஊர்வலமாக அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மேள தாளங்களுடன் அழைத்து வரப்பட்டனர். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.