ஞானசேகருக்கு 30 ஆண்டுகள்
சிறை தண்டனை விதிக்கப்பட்டது
கடைசிவரை அந்த சார் யார் என்று
தெரியாமல் போய்விட்டதே
சற்று வருத்தமாக தான் உள்ளது
சர்க்கரை நோயாளிகள் எது
வேண்டுமானாலும் சாப்பிடலாம்
ஆனால் அளவோடு இருக்க வேண்டும்
சென்னையில் நகை கடையில்
வேலை பார்த்த வட மாநில இளைஞர்
நகைகளை ஆட்டையை போட்டு
சொந்த ஊருக்கு சென்று விட்டார்
இங்கே இருக்கிறவங்களை
நம்பாமல் வட மாநில இளைஞர்களை
வேலைக்கு வைத்தால் இந்த நிலை
தான் கிடைக்கும். ராமரின்
கல்யாண குணங்கள் கட்டுரை
அருமையாக இருந்தது.
ரிஷிவந்தியா அவர்களின் எறும்பு
யானை கவிதை நல்ல நகைச்சுவை
உணர்வோடு கூடிய கவிதை.
தேன் ராஜா அவர்களின் அழகுக்கு
அழகு கவிதை உண்மையிலேயே
அழகான கவிதை தான். இருவரும்
தமிழ்நாடு எழுத்தாளர்கள்
சங்க உறுப்பினர்கள் என்று
பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்
உப்பு மகாலட்சுமியின் அம்சமாகும்.
டெல்லியில் தமிழர்களின்
குடியிருப்புகள் அகற்றப்பட்டுள்ளது.
இங்கே நாம் வட மாநில
இளைஞர்களுக்கு வேலையும்
கொடுத்து குடியிருப்பு வசதியும்
செய்து கொடுக்கிறோம். கமல்
மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது
திரைப்படங்கள் கர்நாடகாவில்
இனி ஓடாது என அமைச்சர்
கூறியிருக்கிறார். வட்டாள் நாகராஜ்
எங்கே போனார் என்று
தெரியவில்லை இந்த விஷயம்
அவருக்குத் தெரிந்தால் அவர்
பங்குக்கு அவரும் குண்டத் தூக்கி
போடுவார். ட்ரோன் தாக்குதலுக்கு
ரஷ்ய போர் விமானங்கள் 40 காலி
உக்கிரேன் தடாலடி நடவடிக்கை
தமிழ்நாடு இ பேப்பர் செய்திகள்
நாளுக்கு நாள் சுவையாகவும்
துடிப்பாகவும் இருக்கிறது
இதனால் வாசகர்கள்
எண்ணிக்கை கூடி கொண்டு
செல்கிறது. விரைவில் உங்கள்
சாதனையை எட்டும் காலம்
கனிந்து வருகிறது மிக்க மகிழ்ச்சி
பாராட்டுக்கள்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி