சைக்கிள் யாரிடம் இருக்கிறது என்பதைப்
பொருத்தே அது வாகனமா உடற் பயிற்சிக் கருவியா என முடிவு செய்யப் படுகிறது.
தமிழ்நாடு இ பேப்பரின் வாசக சொந்தங்கள் இந்த சந்தர்ப்பத்தை ஆக்கப் பூர்வமாக பயன் படுத்தி, தாங்களும் வளர்ந்து, ஏற்றி விடும்
லிஃப்ட் ஆகிய ஏணியையும் உயிர்ப்பித்து ஏற்றி விடும் அதிசயம் பற்றி நினைத்துப் பார்க்கும் போது தொடக்கத்தில் குறிப்பிட்ட வரிகள் சிந்தனையில் சிறகடித்துப் பறந்து சிலிர்ப்போடு சந்தோஷத்தையும் அள்ளுகிறது.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
பார்ப்பான் அகத்திலே
பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரின்றி சோம்பித் திரிவன...
மேய்ப்பாரும் உண்டாகில் பாலாய்
சொரியுமே...
மனித ஆற்றலை துல்லியமாக எடுத்துரைத்த திருமூலரின் தீர்க்க தரிசன வைர வரிகள்.
பிரம்மத்தையே உள்ளடக்கக் கூடிய பேராற்றல் பெற்றவன் மனிதன்.இதைத் தான்
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு என்கிறார் திருமூலர்.
இந்தப் பேராற்றலை
உணர்ந்து உய்வு காண்பது தான் ஆறறிவுக்கு அழகு.
தமிழ்நாடு இ பேப்பரின் உள்ளடக்கத்தையும்
உணர்வுப் பூர்வமான இயக்கத்தையும் திட சிந்தனையில தெளிந்த நம்பிக்கையில் தூய அன்பில் உணர்ந்து
இந்த பூக்களும் முட்களும் புதிர்களும் நிறைந்த பூவுலக வாழ்க்கையை எதிர் கொள்வதை இயல்பாக்கிக் கொண்டால் எல்லாம் எளிது... எல்லாம் இன்பம். எல்லாம் இன்பம் என்பதில் கனமான உள்ளடக்கம்
உள்ளது.
மனித வாழ்வின் சவாலே துன்பத்தை சந்திப்பதில் தான் இருக்கிறது. அந்தத் துன்பத்தை இன்பமாக்கும் ரசவாத வித்தையை வசமாக்கிக் கொண்டால் எல்லாம் இன்பம் என்பது அறிவியல் உளவியல் ஆகி விடும்.
இதைத் தான் வள்ளுவப் பெருந்தகை அற்புதமாக வழி நடத்துவார்.
இன்பத்தில் இன்பம் காண்பது விலங்கின் உணர்வு.துன்பத்தில்
இன்பம் காண்பது பகுத்தறிவின் பேருணர்வு.
ரசகுல்லாவில் இனிப்பு
காண்பதில் இல்லை பெருமை.
பாகற்காயில் இனிப்பு காண்பது தான் மனிதப் படைப்பின் உன்னதம் ஒளிந்துள்ளது.
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையும் சிறப்பு.
இந்த ஒற்றை திருக்குறள் போதும்...
உலக வாழ்க்கையை
அர்த்த கனத்துடன் ஆனந்தமயம் ஆவதற்கு...
இப்படிப்பட்ட வாழ்வியல் சிந்தனைகளை நமது வாசக சொந்தங்கள்
வாசிப்பதோடு தங்களை வளப்படுத்திக் கொள்ளவும் வேண்டும் என்பதற்காகத் தான்
தினசரி ஒரு திருக்குறளை விளக்கத்தோடு தவறாமல் பதித்து
நமக்கு பாடம் புகட்டி
புத்துணர்வு ஊட்டி வருகிறது தமிழ் நாடு இ பேப்பர்!
சிரத்தையுடன் சிந்தை குவிந்தால் சிறப்புகள்
நம்மைத் தேடி வந்து சொர்க்கம் படைக்கும்.
சந்தேகமில்லை.
சரி, இன்றைய செய்தி,
சிறப்பு படைப்புகளுக்கு திசை திரும்புவோம்.
அண்ணா பல்கலை வழக்கில் அதிரடி தீர்ப்பு...
ஞான சேகரனுக்கு 30
ஆண்டுகள் சிறை தண்டனை.
படிக்கும் போது ஒரு சிந்தனை...
குற்றம் செய்யத் தோன்றாத சமூகச் சூழலை உருவாக்குவது தான் உன்னதத்தின் உன்னதம்.
மகிமையின் மகிமை.
மகத்துவத்தின் மகத்துவம்.
ஆட்சியாளர்களும் குடி மக்களும் இந்த விஷயத்தில் இல்லை இந்த வேள்வியில் ஒன்றிணைந்து இதயம் பதித்தால் இங்கே இது என்ன எல்லாமே சாத்தியம்
சாத்தியம்...!
பிரதமர் மோடியை வெளிநாடுகளுக்கு சென்று வந்த எம்.பி. க்கள் குழு சந்திப்பு.
முக்கிய பயணம்.
நல்ல முடிவுகள் நிச்சயம் சித்திக்கும்.நம்புவோம்
முழுமையாய்...
இந்த தருணத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை வேண்டுகோள்...
அஹிம்சைக்கும்
பேரன்புக்கும் அகிலத்தில் அடையாளமாக திகழும் நம் தேசம் போரில்லா உலகுக்காக குரல் கொடுப்பதில் -- அதற்கான செயல் திட்டங்களை வகுபாபதில் முன்னணியில் நிற்க வேண்டும்.தாத்பர்யக்
கடமை என்று தான் சொல்ல வேண்டும்.
நமது பாரம்பரிய கலாச்சாரத்தின் ஆணி வேர் இதில் அடக்கம்.
ஆகவே இதுவரை எந்த தேசமும் செய்யத் துணியாத ஒரு நற்பணிக்கு பிள்ளையார் சுழி போட்டு முன்மாதிரி யாக திகழ வேண்டும்.
மத்திய அமைச்சரவையில்
போரில்லா உலக அமைதிக்காக ஓரு புதிய அமைச்சகம்.
கேபினட் அந்தஸ்து உள்ள அமைச்சர்...
கணிசமான நிதி ஒதுக்கல்... முழுக்க முழுக்க உலக அமைதிக்கான முயற்சிகளில் தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
உதாரணத்துக்கு...
சமீபத்தில் பஹல்காம் தாக்குதலை மையமாக வைத்து உலக நாடுகளுக்கு சுற்றுப் பிரயாணம் பண்ணிய எம்.பி.குழுக்களைப் போல... நிபுணர் குழுக்களை அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி வைத்து,
அந்தந்த நாட்டுத் தலைவர்களை சந்தித்து 0போரில்லா உலகம் வேணாடி நிரந்தர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...
முயற்சி இருந்தால் முடியாதது என்று எதுவும் உண்டோ?
வட்டார செய்திகள் வண்ணக் கோலத்தில்
உள்ளம் கவர்கின்றன.
சாந்தி ஜெ யின் படைப்பான எழுத்தாளர்கள் லோகம் ரசிக்கத்தக்க நல்ல கற்பனை சார்!
சபாஷ்... சபாஷ்!
சு.பத்மாவதி சுரேஷ் வடித்த கனவுக்கு காலம் இல்லை படைப்பு ஜோர் ஜோர்!
தி.வள்ளியின் ஸ்ரீ ராமரின் கல்யாண குணங்கள் பரவசம் அள்ளியது நிஜம்.
ஸ்டாலின் சீனிவாசன் வரலாறு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் சிறப்பு.
கவிதைகள் அனைத்தும் காவியப் பரவசம் அளித்து சுவை பெருக்கி சொர்க்கம் காட்டின.
அனைத்து கவிதை உள்ளங்களுக்கும்
ஆனந்த வணக்கமும்
வாழ்த்து மலர்க் கொத்துகளும்...
தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுவினரின் அற்புதம் அள்ளும் மகத்தான பணி மேலும் மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்