அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு உட்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு உட்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்



சென்னை: அண்ணா அறி​வால​யம், நடிகை குஷ்பு வீடு என சென்​னை​யில் 7 இடங்​களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்​டல் விடுக்கப்பட்​டது. தமிழக காவல் துறை​யின் தலைமை அலு​வல​க​மான டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேற்று மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது.


அதில், “கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை, அண்ணா அறி​வால​யம், சாந்​தோமில் உள்ள நடிகை குஷ்பு வீடு, மந்​தை வெளி​யில் உள்ள நடிகர் எஸ்​.​வி.சேகர் வீடு, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அமலாக்​கத்​துறை அலு​வல​கம் உள்​ளிட்ட 7 இடங்​களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.


தொடர் நிகழ்வு: இதைத் தொடர்ந்து போலீ​ஸார் வெடிகுண்டு மிரட்​டல் விடுவிக்​கப்​பட்ட 7 இடங்​களி​லும் வெடிகுண்​டு​களை கண்டறிந்து அகற்​றும் நிபுணர்​கள், மோப்ப நாய்​களு​டன் விரைந்து சோதனை நடத்​தினர்.


பல மணி நேரம் நடை​பெற்ற சோதனைக்கு பிறகும் சந்​தேகப்​படும்​படி​யான எந்த பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. எனவே அந்த மின்​னஞ்​சல், வதந்​தியை பரப்​பும் நோக்​கத்​தில் விடுக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது.


இது தொடர்​பாக சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். அண்​மைக் கால​மாக இது​போன்ற வெடிகுண்டு மிரட்​டல்​கள் தொடர்ந்து வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%