அனில் அம்பானியின் ரூ.1,400 கோடி சொத்து முடக்கம்: பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை
Nov 23 2025
17
புதுடெல்லி: ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான மேலும் ரூ.1,400 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “அனில் அம்பானி மீது அமலாக்கத் துறை பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் ஏற்கெனவே ரூ.7,500 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது புதிதாக நாட்டின் பல பகுதிகளில் அனில் அம்பானிக்கு சொந்தமான மேலும் ரூ.1,400 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.9,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது” என்று தெரிவித்தன.
அனில் அம்பானி பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை சமீபத்தில் முடக்கிய சொத்துகளில் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி அறிவு நகரம் (டிஏகேசி) தொடர்புடைய 132 ஏக்கர் நிலமும் அடங்கும். இதன் மதிப்பு ரூ.4,462.81 கோடி ஆகும்.
மேலும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வங்கி மோசடி வழக்கிலும் ரூ.3,083 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய 42 சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
--------
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?