திடீரென முகநூலில் நட்பானாள் அவள் !
நான் எழுதிய கவிதைகளுக்கு விரல்களால் லைக் போட்டு என் மனதை கவர்ந்திருந்த
அவள் பெயர் தமிழரசி !
ஒருவேளை அவள் தமிழ் அறிஞர்கள் பாரம்பரிய குடும்பமாய் இருப்பாள்..
என்ற நோக்கத்தில் அவளை கவர தமிழ் இலக்கிய
நூல்களைப் படித்து இலக்கியத்தை புனைந்து... |
அவளைப் பற்றி கவிதை எழுதி முகநூலில் பதிவிட்டேன்....
உடனடியாய் அவளிடம் இருந்து பதில் வந்தது !
"ஹாய் ...யுவர் போயம் ஆர் பியூட்டிஃபுல்,...
ரியலி லைக் யூ அண்ட் யுவர் போயம்ஸ்.. !"
என்ற தமிழரசியின் பதில் பதிவில் இருந்து இப்போது
"30 நாட்களில் ஆங்கிலம் கற்பது எப்படி !' என்ற புத்தகத்தை படிக்க துவங்கியுள்ளேன் !.
-------------------------------------
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?