ஆயுதபூஜை-தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு

ஆயுதபூஜை-தீபாவளி சிறப்பு  ரயில்களுக்கு இன்று முன்பதிவு

சென்னை: ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை (செப். 20) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில் செப்.22, 29, அக். 6, 13, 20 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கத்தில் செவ்வாய்க் கிழமைகளில் பிற்பகல் 3.35 மணிக்கு கன்னியாகுமரி யில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். திருநெல்வேலி - செங்கல்பட்டு இடையே வாரம் இரு முறை சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் என்று தென்னக ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%