இதயக் கதவைத் திறந்து விடு! நல்லெண்ணக் காற்றை நுழைய விடு! இருண்டு கிடக்கும் மன வீட்டில் அன்பு ஒளியைப் பரவ விடு! இளமையில் கற்கப் பழகி விடு! இனிமையாய்ப் பேசப் பயிற்சி எடு! உழைத்தே நீயும் உயர்ந்து விடு! உண்மையை உள்ளத்தில் பதியவிடு உயிர்களிடம் அன்பு செலுத்திவிடு - பிறர் உணர்ச்சிகளுக்கு என்றும் மதிப்புக் கொடு! மூடநம்பிக்கையை அறவே விட்டு விடு! முன்னேற்றும் வழிகளையே தேர்ந்து எடு! நல்லவர் துயரைத் துடைத்து விடு நலிந்தவர்க்கு உதவி புரிந்து விடு! நா நயத்தால் நல்ல பெயரையெடு! ஐயம் என்பதையே ஒழித்து விட்டு ஐம்புலன்களையும் அடக்கப் பழகிவிடு! ஓய்வில்லாமல் நல்ல பயிற்சியெடு! ஒலிம்பிக் பரிசுக்குக் கழுத்தைக் கொடு!

எஸ். சந்திரசேகரன் அமுதா செஞ்சிக்கோட்டை
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?