இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் 10 மகளிர் கண்காணிப்பு மையம் அமைக்க இந்தோ திபெத் எல்லை போலீஸ் திட்டம்

இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் 10 மகளிர் கண்காணிப்பு மையம் அமைக்க இந்தோ திபெத் எல்லை போலீஸ் திட்டம்


 

ஜம்மு: இந்​தியா - சீனா எல்​லைப் பகு​தி​யில் 10 மகளிர் கண்​காணிப்பு மையங்​களை அமைக்​க​வுள்​ள​தாக இந்தோ திபெத் எல்லை போலீஸ் தெரி​வித்​துள்​ளது.


இந்​தியா - சீனா​வின் 3,488 கி.மீ தூர எல்​லைப் பகு​தியை கண்காணிக்​கும் பொறுப்​பில் இந்தோ - திபெத் எல்லை போலீஸ்​(ஐடிபிபி) ஈடு​பட்​டுள்​ளது. இதில் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வீரர்கள் மற்​றும் அதி​காரி​கள் பணி​யாற்​றுகின்​றனர். 9,000 அடி முதல் 14,000 அடி வரை​யுள்ள மலைப் பகு​தி​களில் இவர்​கள் பாதுகாப்பு பணியை மேற்​கொள்​கின்​றனர். இந்​நிலை​யில் ஐடிபிபி-​யின் 64-வது எழுச்சி தினம் ஜம்​மு​வில் நேற்று முன்​தினம் கொண்டாடப்பட்டது.


இந்​நிகழ்ச்​சி​யில் அதன் தலைமை இயக்​குனர் பிர​வீன் குமார் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: இந்​தியா - சீனா எல்​லை​யில் முன்பு 180 கண்​காணிப்பு மையங்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. இது தற்​போது 215-ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.


7 புதிய பட்​டா​லியன்​கள் அமைக்​கப்​பட்​டதன் மூலம் இத்​திட்​டம் வலுப்​பெற்​றுள்​ளது. இதன் மூலம் எல்​லைப் பகுதி கண்​காணிப்பு மேம்​பட்​டுள்​ளது. மேலும் 41 கண்காணிப்பு மையங்​களை அமைக்க திட்​ட​மிட்​டுள்​ளோம்.


இதில் 10 மையங்​களில் முழு​வதும் பெண் காவலர்​கள் பணி​யாற்​று​வர். லடாக்​கில் உள்ள லூகுங் மற்​றும் இமாச்​சலப் பிரதேசத்​தின் தாங்கி ஆகிய இடங்​களி​லும் பெண் காவலர்​கள் பணி​யாற்​றும் மையங்​கள் அமைக்​கப்​படும்.எல்​லைப் பகு​தி​யில் மேலும் 8 மையங்​களில் பெண்​கள் பணி​யாற்​று​வர். ஐடிபிபி பயிற்சி மையங்​களில் வழங்​கப்​படும் பயிற்​சிகள், மலைப் பகு​தி​களில் பணி​யாற்​றும் வகை​யில் மேம்​படுத்​தப்​படும். இவ்​வாறு பிர​வீன்​ குமார்​ கூறி​னார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%