பிஹாரில் 6 மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியம் - தாக்கம் எத்தகையது?

பிஹாரில் 6 மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியம் - தாக்கம் எத்தகையது?


 

புதுடெல்லி: பிஹாரில் தாய்ப்​பாலில் யுரேனி​யம் கண்டறியப்பட்டு உள்​ளது. இதனால் குழந்​தைகள், பெண்​களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்​ப​டாது என்று என்​டிஎம்ஏ மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்​ளார்.


பிஹார் தலைநகர் பாட்​னா​வில் செயல்​படும் மகாவீர் புற்​று​நோய் மருத்​து​வ​மனை​யின் மூத்த மருத்​து​வர்​கள் அருண் குமார், அசோக் கோஷ் மற்​றும் டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யின் மூத்த மருத்து​வர் அசோக் சர்மா தலை​மையி​லான குழு​வினர் பிஹாரின் பல்​வேறு மாவட்​டங்​களில் தாய்ப்​பாலை சேகரித்து ஆய்வு செய்தனர்.


இதன்​படி கடந்த 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை போஜ்பூர், சமஸ்​திபூர், பெகு​சா​ராய், ககாரி​யா, கதிஹார், நாளந்தா ஆகிய 6 மாவட்​டங்​களில் 40 தாய்​மார்​களின் தாய்ப்​பால் ஆய்வு செய்யப்பட்​டது. அப்போது அனைத்து தாய்​மார்​களின் தாய்ப்பாலிலும் யுரேனி​யம் கலந்​திருப்​பது கண்​டறியப்​பட்​டது.


இதுகுறித்து மூத்த மருத்​து​வர்​கள் அருண்​கு​மார், அசோக் கோஷ் கூறிய​தாவது: கங்கை நதியை ஒட்டி அமைந்​துள்ள மாவட்டங்களில் தாய்​மார்​களின் தாய்ப்​பாலை பரிசோதனை செய்​தோம். அனைத்து மாதிரி​களி​லும் யுரேனி​யம் கண்டறியப்பட்டது. கங்கை நதி நீர் மற்​றும் நிலத்​தடி நீரில் யுரேனி​யம் கலந்​திருக்​கிறது.


இப்​பகு​தி​களில் விற்​பனை செய்யப்படும் மஞ்​சள் தூளில் நிறத்துக்காக ரசாயனம் செய்யப்படு​கிறது. இதில் ஈயம் உள்​ளது. இதன்​ காரண​மாக சில மாவட்​டங்​களை சேர்ந்த தாய்​மார்​களின் தாய்ப்​பாலில் யுரேனியம் இருக்​கிறது. எனவே பெண்​கள் குடிநீர் மற்றும் சமையலுக்கு பயன்​படுத்​தப்​படும் மஞ்​சள் தூள் உள்ளிட்டவற்​றில் கவன​மாக இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரிவித்துள்ளனர்.


இதுதொடர்​பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய (என்​டிஎம்ஏ) மூத்த விஞ்​ஞானி தினேஷ் கே அஸ்​வால் கூறும்போது, ”உலகம் முழு​வதும் மண்​ணில் யுரேனி​யம் இருப்​பது இயல்​பானது. இதன்​ காரண​மாகவே பிஹாரின் குறிப்​பிட்ட மாவட்​டங்​களைச் சேர்ந்த தாய்​மார்​களின் தாய்ப்​பாலில் யுரேனி​யம் இருப்​ப​தாக ஆய்வறிக்கை வெளி​யாகி இருக்​கிறது. இதனால் குழந்​தைகள், பெண்​களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்​ப​டாது. உலக சுகா​தார அமைப்பு நிர்​ண​யித்த அளவுக்கு குறை​வாகவே யுரேனி​யத்​தின் அளவு உள்​ளது. பெண்​கள் அச்​சமின்றி குழந்​தைகளுக்கு தாய்ப்பால் வழங்​கலாம்” என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%