நவம்பர் 26 :- இரமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று இந்திய அரசியலமைப்பு தினம் தலைமை ஆசிரியர் திரு நாகராஜன் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்சியில் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு சொக்கர் அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான வரலாறை விரிவாக எடுத்துக்கூறினார். பட்டதாரி ஆங்கில ஆசிரியை திருமதி சபுரா காதரம்மாள் அவர்கள் இந்திய அரசியலமைப்புச்சட்ட முகப்புரையின் சிறப்புகளை பற்றி உரையாற்றினார்கள்.
இறுதியில் இந்திய அரசியலமைப்புச்சட்டம் முகப்புரை வாசிக்கப்பட்டது மேலும் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இந்நிகழ்சியில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?