இரிடியம் பெயரில் பல கோடி மோசடி: 30 பேரை கைது செய்தது சிபிசிஐடி

இரிடியம் பெயரில் பல கோடி மோசடி: 30 பேரை கைது செய்தது சிபிசிஐடி

சென்னை:

ஒரு லட்​சம் ரூபாய் முதலீடு செய்​தால் ரூ.1 கோடி லாபம் கிடைக்​கும் என இரிடி​யம் பெயரில் தமிழகம் முழு​வதும் கோடிக்​கணக்​கில் பண மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக 30 பேரை சிபிசிஐடி போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.


ரிசர்வ் வங்கி சார்​பில் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் கடந்த ஆண்டு ஒரு புகார் கொடுக்​கப்​பட்​டது. அதில், ‘பிளாட்​டினம், தங்​கத்​தை​விட அதிக மதிப்​புடைய இரிடி​யத்தை விற்​பனை செய்து ரிசர்வ் வங்​கி​யில் கோடிக்​கணக்​கில் பணம் வைத்​திருப்​ப​தாக​வும், அந்​த பணத்​தை பெற சேவை கட்​ட​ணம் செலுத்த வேண்​டும் என்​றும், இதற்​காக ஒரு லட்​சம் ரூபாய் முதலீடு செய்​தால் ரூ.1 கோடி லாபம் கிடைக்​கும் என்​றும் ஆசை வார்த்தை கூறி மோசடி கும்​பல்​கள் பண மோசடி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றன. மேலும், ரிசர்வ் வங்கி அதி​காரி​கள் போல ஆள்​மாறாட்​டம் செய்​தும், போலி ஆவணங்​களை தயாரித்​தும் இந்த மோசடி அரங்​கேற்​றப்​பட்​டுள்​ளது. இதில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’ என்று கூறப்​பட்​டிருந்​தது.


இந்த விவ​காரம் தொடர்​பாக சிபிசிஐடி பிரிவு போலீ​ஸார் வழக்கு ​ப​திவு செய்து விசா​ரித்​தனர். முதல்​கட்​ட​மாக ரூ.4.5 கோடி மோசடி​யில் ஈடு​பட்ட 6 பேரை கடந்த ஜூன் மாதம் கைது செய்​தனர். இதே பாணி​யில் தமிழகத்தை சேர்ந்த பலரிடம் லட்​சக்​கணக்​கில் மோசடி நடை​பெற்​றிருக்​கும் தகவல் சிபிசிஐடி போலீ​ஸாருக்கு கிடைத்​தது. அதன்​பேரில் தாமா கவே முன்​வந்து வழக்​கு ​ப​திவு செய்​தனர்.சேலம் சிபிசிஐடி போலீ​ஸார் பதிவு செய்​த இந்த வழக்​கில், மோசடி தொடர்​பாக 13 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.


இந்த வழக்கு விசா​ரணை​யின் தொடர்ச்​சி​யாக சிபிசிஐடி போலீ​ஸார் நேற்று முன்​தினம் அதிரடி சோதனை​யில் இறங்​கினர். குறிப்​பாக சென்​னை, வேலூர், ராணிப்​பேட்​டை, திருச்​சி, கரூர், நெல்லை உள்​ளிட்ட 20 மாவட்​டங்​களில் 43 இடங்​கள், வெளி மாநிலங்​களில் 4 இடங்​கள் என மொத்​தம் 47 இடங்​களில் சோதனை மேற்​கொள்​ளப்​பட்​டது. இதில், மெகா மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சென்​னையை சேர்ந்த சுவாமி​நாதன் மற்றும் காட்​பாடியை சேர்ந்த ஜெய​ராஜ், புதுக்​கோட்டை குடுமி​யான்​மலை​யை சேர்ந்த ரவிச்​சந்​திரன், மணப்​பாறையை சேர்ந்த ஞானப்​பிர​காசம், திண்​டுக்​கல்​லை சேர்ந்த டெய்சி ராணி ஆகிய 5 முக்​கிய நபர்கள் உட்பட 30 பேர்கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கு தொடர்​பாக தீவிர விசா​ரணை நடந்து வரு​கிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%