உதகை, குன்னூரில் கனமழை: 16 இடங்களில் மண் சரிவு மலை ரயில் ரத்து

உதகை, குன்னூரில் கனமழை: 16 இடங்களில் மண் சரிவு மலை ரயில் ரத்து


உதகை: நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வியாழனன்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, குன் னூரில் 215 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது உறை பனியின் தாக்கம் அதிகமாக தென்பட்ட நிலையில், திடீ ரென காலநிலை மாறி மழை பெய்தது. வியாழனன்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. மலை ரயில் பாதை யில் ஐந்து இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்ததால் தண்டவாளம் முழுவதும் சகதியாக மாறியது. இதனால் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%