
புதுக்கோட்டை, செப். 22- புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில், ஏழை மாணவர்களுக்கும், ஆதரவற்ற பெண்ணுக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டது. தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் முதலாமாண்டு படிக்கும் மாணவர் துளசிராமுக்கு ரூ.18,000 கல்வி உதவி நிதியாகவும், அரசு மருத்துவ கல்லூரி யில் செவிலியர் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு பயிலும் மாணவி மகாலட்சுமிக்கு ரூ.13,000 கல்வி உதவி நிதியாகவும் வழங்கப்பட்டது. மேலும், ஆதரவற்ற பெண் ஒருவருக்கு அவருடைய குடிசை வீட்டை சீரமைக்க ரூ.18,000 நிதி உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் எஸ்.இளங்கோ தலைமை வகிகத்தார். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பா ளர் கருணாகரன், சங்கத்தின் செயலாளர் சாகுல் ஹமீது, திட்டத் தலைவர் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?