ஒரே வீட்டை 2-வது முறையாக குத்தகைக்கு கொடுப்பதாக கூறி ரூ.10.50 லட்சம் மோசடி: வீட்டு உரிமையாளர் கைது

ஒரே வீட்டை 2-வது முறையாக குத்தகைக்கு கொடுப்பதாக கூறி ரூ.10.50 லட்சம் மோசடி: வீட்டு உரிமையாளர் கைது

சென்னை:

ஒரே வீட்டை இரண்​டாவது முறை​யாக குத்​தகைக்கு தரு​வ​தாகக் கூறி ரூ.10.50 லட்​சம் மோசடி செய்த வீட்டு உரிமையாளரை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் மணி​கண்​டன் (25). இவர் கடந்​தாண்டு டிசம்​பர் மாதம் அயனாவரம் பகு​தி​யில் குத்​தகைக்கு வீடு பார்த்​துக் கொண்​டிருந்​தார்.


அப்​போது அயனாவரம், பாரதி நகரில் உள்ள ஒரு வீட்​டின் உரிமை​யாளர் சிவகு​மார் (56) என்​பவரது அறி​முகம் கிடைத்​தது. அவர், மணி​கண்​டனிடம் தனக்​குச் சொந்​த​மான வீடு இதே பகு​தி​யில் உள்​ளது. அந்த வீட்டை ரூ.15 லட்​சத்​துக்கு குத்​தகைக்கு கொடுப்பதாகவும், தற்​போது வசித்து வருபவர்​கள் இன்​னும் 2 மாதங்​களில் வீட்டை காலி செய்​ததும் குடிபெயரலாம் எனவும் கூறியுள்ளார். இதை நம்​பிய மணி​கண்​டன் ரூ.15 லட்​சத்தை சிவகு​மாரிடம் கொடுத்​து, குத்​தகை ஒப்​பந்த பத்​திரம் போட்​டுள்​ளார்.


ஆனால் சிவகு​மார் சொன்​னபடி வீட்டை காலி செய்து கொடுக்​காமல் காலம் தாழ்த்தி வந்​துள்​ளார். பின்​னர் சிறிது சிறி​தாக ரூ.4.5 லட்​சம் திருப்​பிக் கொடுத்​துள்​ளார். மீதி பணம் ரூ.10.5 லட்​சத்தை கேட்​ட​போது, பணத்​தைத் தர முடி​யாது என மிரட்​டி​யுள்​ளார்.


அதிர்ச்சி அடைந்த மணி​கண்​டன் கடந்த 14-ம் தேதி இது தொடர்​பாக அயனாவரம் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதையடுத்​து, வீட்டை குத்​தகைக்கு தரு​வ​தாகக் கூறி பண மோசடி​யில் ஈடுபட்டதாக சிவகு​மாரை கைது செய்​தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%