கடந்த ஆண்டு மட்டும் 21 லட்சம் வாகனங்கள் பதிவு

கடந்த ஆண்டு மட்டும் 21 லட்சம் வாகனங்கள் பதிவு



சென்னை: தமிழ் நாட்டில் 2025 ஆம் ஆண்டில் வாகன விற்பனை 8.4 சதவீதம் அதிகரித்துள்ளது என ஒன்றிய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறை அமைச் சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் 21,18,489 புதிய வாகனங்கள் பதிவு செய் யப்பட்டுள்ளதாக கூறப்பட் டுள்ளது. 2024 ஆம் ஆண்டை விட, 8.4 சத வீதம் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. இவற்றில், இருசக்கர வாகனங்களின் எண் ணிக்கை மட்டும் 16.40 லட்சமாகும். மின் வாக னங்கள் எண்ணிக்கை 2024-இல் ஒரு லட்சத்து 34 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரு லட்சத்து 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மேலும், ஒட்டுமொத்த வாகன விற்பனையில், 40 சதவீதம் சென்னை, செங்கல்பட்டு, திருவள் ளூர், கோவை, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங் களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%