கல்லறை, பட்டா சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு: மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் தகவல்

கல்லறை, பட்டா சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு: மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் தகவல்


சென்னை: ‘கல்​லறை, பட்டா சிக்​கல்​களுக்கு டிசம்​பர் மாதத்​துக்​குள் தீர்வு காணப்​படும்’ என மாநில சிறு​பான்​மை​யினர் ஆணை​யத் தலை​வர் தெரி​வித்​தார். தமிழ்​நாடு மாநில சிறு​பான்​மை​யினர் ஆணை​யம் சார்​பில் ஆணை​யக் குழு உறுப்​பினர்​கள் மற்​றும் அரசு அலு​வலர்​களு​ட​னான கலந்​தாய்​வுக் கூட்​டம் தமிழகம் முழு​வதும் கடந்த ஒன்​றரை ஆண்​டு​களாக நடந்து வரு​கிறது.


அதன் நிறை​வாக சென்னை மாநகருக்​கான கலந்​தாய்​வுக் கூட்​டம், மாநக​ராட்சி ரிப்​பன் கட்​டிட வளாக கூட்​டரங்​கில் நேற்று நடை​பெற்​றது. மாநில சிறு​பான்​மை​யினர் ஆணை​யத் தலை​வர் சொ.ஜோ.அருண் சே.ச தலை​மை​யில் நடந்த கூட்​டத்​துக்கு மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே முன்​னிலை வகித்​தார்.


இக்​கூட்​டத்​தில் சிறு​பான்​மை​யினர் சமூகங்​களின் தலை​வர்​கள் மற்​றும் பொது​மக்​களை சந்​தித்​து, அவர்​களது கருத்​துகளை ஆணை​யத் தலை​வர் கேட்​டறிந்​தார்.


பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மாநிலம் முழு​வதும் ஆய்வு செய்​து, 1,477-க்​கும் மேற்​பட்ட கோரிக்கை மனுக்​களைப் பெற்​றுள்​ளோம். இவற்​றுள் 1,156 கோரிக்​கைகளுக்கு கூட்ட அரங்​கிலேயே தீர்வு கண்​டிருக்​கிறோம். சில​வற்​றுக்​குத் தீர்வு காணும் நடவடிக்​கைகள் நடை​பெற்று வரு​கின்​றன.


சிறு​பான்​மை​யினருக்கு முக்​கிய பிரச்​சினை​யாக இருப்​பது கல்​லறை மற்​றும் கபர்​ஸ்​தான் வசதி இல்​லாமை​தான். அந்​தவகை​யில் கல்​லறை அமைக்க இடங்​கள் வேண்​டும், இடமிருக்​கும் இடத்​தில் அதற்​குப் பட்டா வேண்​டும், பட்டா வழங்​கப்​பட்ட இடத்​தில் சுற்​றுச்​சுவர் அமைத்​தல், பாது​காப்பு மற்​றும் கட்​டு​மானத்​துக்​கான உதவித்​தொகை வேண்​டும் என்ற கோரிக்​கைகளே அதி​க​மாக வைக்​கப்​பட்​டுள்​ளன.


அதே​போல் ஆலயங்​கள், மசூ​தி​கள், சமண விகார்​கள், பவுத்த விகார்​கள் போன்ற வழி​பாட்​டுத் தலங்​களுக்கு தடை​யில்​லாச் சான்​றிதழ் வேண்​டும் என்​றும், 10 ஆண்​டு​கள், 50 ஆண்​டு​கள், 100 ஆண்​டு​களுக்​கும் மேலாக இருக்​கும் இடங்​களுக்கு பட்டா வேண்​டும் என்​றும் கோரிக்கை வைக்​கப்​பட்​டுள்​ளது. பட்டா இல்​லாத​தால், புனரமைப்பு மற்​றும் பழுது​பார்க்​கும் நிதி​யைப் பயன்​படுத்த முடி​யாமல் போகிறது.


மாநிலம் முழு​வதும் உள்ள கல்​லறை மற்​றும் பட்டா பிரச்​சினைக்கு ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் தீர்​வு​காண்​பதை விட, மாநில அளவில் ஓர் அரசாணை​யாக வெளி​யிட்​டுத் தீர்​வு​காண வேண்​டும் என முதல்​வரிடம் பரிந்​துரை வைத்​துள்​ளோம்.


டிசம்​பர் மாதத்​துக்​குள் இதற்​குத் தீர்வு காணப்படும். இவ்​வாறு அவர் கூறி​னார். சிறு​பான்​மை​யினர் ஆணை​யத் துணை தலை​வர் எம்​.எம்​. அப்​துல் குத்​தூஸ், மாவட்ட வரு​வாய் அலு​வலர்​ சு.கீ​தா உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%