இந்தியாவை வளர்ந்த நாடாக்க கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்

இந்தியாவை வளர்ந்த நாடாக்க கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்


 

சென்னை: இந்தியாவை வளர்ந்த நாடாக்க நமது கல்​வித் தரத்தை உயர்த்த வேண்​டும் என்று அண்ணா பல்​கலை. முன்​னாள் துணைவேந்​தர் இ.பால​குரு​சாமி தெரி​வித்​தார்.


சென்னை சகோ​தயா பள்ளி கூட்​டமைப்​பின் சார்​பில் சிபிஎஸ்இ பள்​ளி​களின் முதல்​வர்​களுக்​கான ‘தேசிய அளவில் கற்​றல், கற்​பித்​தலில் உள்ள சவால்​கள்’ குறித்த கருத்​தரங்​கம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.


இதில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் முன்​னாள் துணைவேந்​தர் இ.பால​குரு​சாமி பேசி​ய​தாவது: சுதந்​திரம் பெற்று நீண்ட கால​மாகி​யும் ஜப்​பான், அமெரிக்கா போன்ற நாடு​களைப் போல் நாம் முன்​னேற முடிய​வில்​லை. நாம் முன்​னேற சிறந்த கல்​வி, தனி​நபர் வரு​மானம், ஆரோக்​கி​யம் ஆகியவை முக்​கிய​மாகும். அதி​லும் முக்​கிய​மானது கல்​வி.


நாட்​டில் 78 சதவீதம் எழுத்​தறிவு பெற்​றவர்​களாக மாறி​விட்​டோம். பொறி​யியல், வானியல் துறை​களில் நாம் முன்​னேறி​யுள்​ள​தாக கூறிக் கொள்​கிறோம். ஆனால், அதனால் நமக்கு பெரிய அளவில் பயனில்​லை.


நில​வில் தண்​ணீர் உள்​ளதை கண்​டறிந்​தோம். அதனால் நம் குக்​கி​ராமங்​களுக்கு குடிநீர் கிடைக்​கப்​போகிற​தா? திறமையை வளர்க்​கும் கற்​றல்​தான் முக்​கி​யம். நம் நாட்​டின் பொருளா​தா​ரம் வளர்ந்​துள்​ள​தாக புள்​ளி​விவரங்​கள் தெரிவிக்​கின்​றன.


ஆனால் தனி​நபர் வரு​மானத்​தில் மோச​மாக உள்​ளோம். தற்​போது நீதி, நேர்​மை, உண்​மை, தைரி​யத்தை வளர்க்​கும் ஆசிரியர்​கள்​தான் தேவை. ஏனெனில் நாட்​டில் உள்ள ஐஏஎஸ் உள்​ளிட்ட உயரிய பதவி​களில் உள்​ளவர்​களில் 50 சதவீதம் பேரும், பல்​கலைக்​கழக துணைவேந்​தர்​களில் 70 சதவீதம் பேரும் ஊழல்​வா​தி​களாகவே உள்​ளனர்.


2020-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்​டுமென்ற கனவுடன் அப்​துல்​கலாம் செயல்​பட்​டார். அவர் கனவு கடந்து ஐந்​தாண்​டு​களாகி​விட்​டன.


தற்​போது பிரதமர் மோடி 2047-ல் வளர்ந்த நாடாக்​கு​வேன் எனக் கூறுகிறார். நம்​நாட்​டின் அடிப்​படை கல்​வி​யின் கட்​டமைப்பை மாற்​றாதவரை நாடு முன்​னேறு​வது கனவு​தான். இந்தியாவை வளர்ந்த நா​டாக்க, நம் கல்​வி, ஆசிரியர், மாணவர்​கள் தரத்​தில்​ உயர வேண்​டும்​. இவ்வாறு அவர் பேசினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%