கவுகாத்தி டெஸ்டில் கல.. கல... வம்பு இழுத்த பண்ட் : பந்தை காற்றில் பறக்கவிட்ட முத்துச்சாமி
Nov 26 2025
26
முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணியை சரிவில் இருந்து மீட்க, அந்த அணி வீரர் செனுரன் முத்துச்சாமி நிதான ஆட்டத்துடன் விளையாடிக் கொண்டு இருந்தார். 124ஆவது ஓவரின் (வாஷிங்டன் சுந்தர் வீசினார்) 5 பந்தை வீசிய பின்பு (123.5) இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், கேப்டனுமான ரிஷப் பண்ட் “அவரை அடிக்க விடுங்கப்பா (Let Him Hit)” என தென் ஆப்பிரிக்க வீரர் செனுரன் முத்துச்சாமியை ஸ்லெட்ஜிங் (வம்பு) செய்தார். ஆனால் “நன்றி (thank you)” என்று கூறிவிட்டு, 123.6ஆவது பந்தில் (ஓவ ரின் கடைசிப் பந்து) செனுரன் முத்துச் சாமி பிரம்மாண்ட சிக்ஸர் அடித்தார். இது சாதாரண சிக்ஸர் அல்ல. சரி யான கண்டிப்புடன் விளாசப்பட்ட பலம் பொருந்திய ஷாட் ஆகும். ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் வம்பு இழுத்த பண்டிற்கு சிக்ஸ் மூலம் பந்தை காற்றில் பறக்கவிட்டு பதிலடி கொடுத்தார். இதனை இந்திய ரசிகர்களும் கொண்டாடினர். “சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி” என்ற பழ மொழிக்கு ஏற்ப நிதானமாக விளை யாடிக் கொண்டிருந்த செனுரன் முத்துச் சாமியை அதிரடியாக விளையாட வைத்துள்ளார் நமது (இந்திய) அணியின் கேப்டன் பண்ட்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?