
மதுரை, அக். 17
இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பாக தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் சிலம்ப போட்டிகள் கேரள மாநிலம் மூணாறில் நடந்தன. இதில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி 2-ம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி ஜி. புவனேஸ்வரி ஒற்றை சிலம்பம் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இவரை தாளாளர் எம்.தர்வேஷ் முகைதீன், ஆட்சிமன்ற மேலாண்மைக் குழுத் தலைவர் எஸ். முஹம்மது மீரான், முதல்வர் ஹெச்.முகமது மீரான் ஆகியோர் பாராட்டினர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%