சென்னையில் தொழில் தொடங்குவதாக கூறி பெண்ணிடம் ரூ.1 கோடி மோடி செய்த 2 பேர் கைது

சென்னையில் தொழில் தொடங்குவதாக கூறி பெண்ணிடம் ரூ.1 கோடி மோடி செய்த 2 பேர் கைது



குணசேகர், விஜய்.

சென்னை: தொழில் தொடங்க பெண்ணிடம் ரூ.1 கோடி கடன் பெற்று மோசடி செய்த உறவின​ர்கள் இருவர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை மடிப்​பாக்​கம், ராம் நகரைச் சேர்ந்​தவர் சுகந்தி (57). 2019-ம் ஆண்டு இவரது கணவர் ரமேஷ்கு​மாரின் அக்​கா, பள்​ளிக்​கரணை​யில் வசிக்​கும் சரளாதே​வி, அவரது கணவர் குணசேகர் (67) மற்​றும் இவர்​களது மகன் விஜய் (36) ஆகியோர் விடுதி நடத்​து​வதற்​காக ரூ.1 கோடி கடனாக கேட்​டனர். 2 வருடத்​துக்​குள் அந்த கடனை வட்​டி​யுடன் செலுத்தி விடு​வ​தாக​வும் தெரி​வித்​தனர்.


இதை நம்​பிய சுகந்​தி, தங்​களுக்​குச் சொந்​த​மான திரு​வான்​ மியூரில் உள்ள வீட்டை விற்று அதில் வந்த பணத்​தில் ரூ.1 கோடியை வங்கி மூல​மாக​வும், ரொக்​க​மாக​வும் என சரளாதேவி குடும்​பத்​தினரிடம் கொடுத்​தார். சில மாதங்​கள் மட்​டும் மாத கடனை செலுத்​தி​யுள்​ளனர். பின்​னர் 2020-ம் ஆண்டு கரோனா எனக்​கூறி 2023-ம் ஆண்டு வரை சிறிய தொகை கொடுத்​துள்​ளனர்.


மீதத் தொகை ரூ.98 லட்​சத்து 30 ஆயிரத்தை செலுத்​தாமல் ஏமாற்றி உள்​ளனர். இதுகுறித்து கேட்​ட​போது சரளாதே​வி, குணசேகர் மற்றும் மகன் விஜய் ஆகியோர் தகாத வார்த்​தைகளால் பேசி பணம் கொடுக்க முடி​யாது என மிரட்டி அனுப்​பிய​தாக கூறப்படுகிறது.


இதனால் வேதனை அடைந்த சுகந்​தி, இதுகுறித்து மடிப்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, ​காவல் நிலைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டனர். இதில் சுகந்தி புகாரில் தெரி​வித்து இருந்​தது உண்மை என தெரிய​வந்​தது. இதையடுத்து குணசேகர், அவரது மகன் விஜய் ஆகிய இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%