சென்னை மாநகராட்சி சார்பில் 3,000 செல்லப் பிராணிகளுக்கு ஒரே நாளில் மைக்ரோ சிப் பொருத்தம்

சென்னை மாநகராட்சி சார்பில் 3,000 செல்லப் பிராணிகளுக்கு ஒரே நாளில் மைக்ரோ சிப் பொருத்தம்


 

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 91 செல்​லப் பிராணி​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தப்​பட்​டுள்​ளது.


வீடு​களில் செல்​லப் பிராணி​களை வளர்ப்​ப​தற்கு உரிமம் பெறு​வதை சென்னை மாநக​ராட்சி கட்​டாய​மாக்​கி​யுள்​ளது. உரிமம் பெறா​விட்​டால் வரும் நவ.24-ம் தேதி முதல் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​கப்​படும் என அறி​வித்​துள்​ளது. மேலும் கடந்த ஒரு மாத​மாக செல்​லப் பிராணி​களுக்கு ரேபிஸ் தடுப்​பூசி செலுத்​துதல், நாய்​களின் உரிமை​யாளர்​கள் அவற்றை பல்​வேறு காரணங்​களுக்​காக பராமரிக்​காமல் தெரு​வில் விடு​வதைத் தடுக்​க​வும், செல்​லப் பிராணி​களுக்கு முறை​யாக தடுப்​பூசிகள் செலுத்​தப்​பட்டு வரு​கிறதா என்​பதை கண்​காணிக்​க​வும் மைக்ரோ சிப்பை இலவச​மாகப் பொருத்தி வரு​கிறது.


7 இடங்களில் சிறப்பு முகாம்​கள்: இதற்​கான சிறப்பு முகாம்​கள் ஞாயிற்​றுக்​கிழமை​களில் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அதன் தொடர்ச்​சி​யாக நேற்று புளியந்​தோப்​பு, கண்​ணம்​மாபேட்​டை, லாயிட்ஸ் காலனி உள்​ளிட்ட 6 இடங்​களில் உள்ள செல்​லப்​பி​ராணி சிகிச்சை மையங்​கள் மற்​றும் சோழிங்​கநல்​லூரில் உள்ள நாய் இனக்​கட்​டுப்​பாடு மையம் ஆகிய 7 இடங்​களில் சிறப்பு முகாம்​கள் நடை​பெற்​றன. இதில் நேற்று ஒரே நாளில் 3091 செல்​லப் பிராணி​களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்​பூசி செலுத்​தி, மைக்ரோ சிப் பொருத்​தப்​பட்​டது. உரிமம் வழங்​கும் பணி​களும் மேற்​கொள்​ளப்​பட்​டன.


33,418 செல்​லப் பிராணி​களுக்கு... இது​வரை 77,707 செல்​லப் பிராணி​கள் பதிவு செய்​யப்​பட்​டு, அதில் 33,418 செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக மாநக​ராட்சி நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%