
நீ முத்தமிடுவதற்க்காக
சவரம் செய்த கன்னங்களிளெல்லாம்
தோல்வியின் அடையாளமாய்
முட்புதராய்
மண்டிக்கிடக்கிறது தாடி !
தோற்றுப் போவதற்கு என் காதல்
விளையாட்டும் அல்ல .
அழிந்து போவதற்கு என் காதல்
உடலும் அல்ல
காலம் எல்லாவற்றையும் மாற்றி விட்டாலும்
கேடுகெட்ட சொந்தங்களால்
கை கூடா விட்டாலும்
என்னை பொறுத்தவரை என் காதல் புனிதம் தான் !
உன் பெயர் என்னுள் துடிப்பது மட்டுமின்றி
என்னை சுற்றியும் ஒலிக்க வேண்டுமடி !
எனக்கு பிறக்கப் போகும் மகளுக்கு நிச்சயம்
உன் பெயர் சூட்டி
உன் நினைவுகளால் நிச்சயம் காதலோடு வாழ்வேன் !
அடுத்த ஜென்மம் இருக்கா?
இல்லையா ?
என்பது தெரியாது
இருப்பது உண்மையென்றால்
உன்னோடு வாழ தான் வரம் கேட்பேன்
என் காதல் என் மனதோடும் -காற்றோடும் கரைந்து விடக் கூடாது
என்றோ ஒரு நாள்
என்னை அணு அணுவாய் திண்ணப் போகும்
கரையான்களுக்கும் என் காதல் புரியாது .
சாவதற்குள் நிச்சயம் ஒரு நாள்
உன்னை நேரில் பார்த்து சொல்ல வேண்டும் .
என் நெஞ்சுக்குள் உறங்காமல் இருக்கும்
உனக்கான காதலை .
நான் வேறொருத்திக்கு "திரு "வாகவும்
நீ வேறொருத்தனுக்கு "திருமதி "யாகவும்
மாறி போன பின்பு கூட
மாறவில்லை
சொல்லாத என் பொல்லாத காதல் .
நிச்சயம் சொல்லி விடுவேன்
மரணம் என்னை காதலிப்பதற்கு முன் !
-நௌஷாத் கான் .லி -
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?