ஜன.6 வேலை நிறுத்தத்தில் 64 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் பங்கேற்பு
Jan 04 2026
24
திண்டுக்கல்: ஜனவரி 6 ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ நடத்தும் தொடர் வேலைநிறுத்தத்தில் 64ஆயிரம் சத்து ணவு ஊழியர்கள் பங்கேற்க முடிவெடுத்துள்ளனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் மாநிலத் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் ஜெசி, மாநிலப் பொருளாளர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மாநிலப் பொதுச் செயலாளர் ஜெசி செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: சத்துணவு ஊழியர் சங்கத்தின் நீண்ட கால கோரிக்கை களான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதி யம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணி ஓய்வின்போது பண பலனாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் கூட்டுப் போராட்டக் குழுவான ஜாக்டோ-ஜியோ அறி விப்பின்படி, ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 64,000 பேர் பங்கேற்கின்றனர். மாண வர்களை பட்டினி போடாமல், மாற்று ஏற்பாடு செய்து, இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?