தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க கோரிக்கை

தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க கோரிக்கை

சென்னை:

அடுத்த மாதம் தீபாவளி பண்​டிகை ​கொண்​டாடப்​பட​வுள்ள நிலை​யில்​, சென்​னை​யில் இருந்து சொந்த ஊர்​களுக்கு செல்​லும் பயணி​களின் வசதிக்​காக, சிறப்பு ரயில்​களை முன்​ன​தாகவே அறிவிக்க பயணி​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.


இந்த ஆண்டு தீபாவளி பண்​டிகை அக். 20-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. ரயில் டிக்​கெட்​டைப் பொருத்​தவரை 60 நாட்​களுக்கு முன்பே முன்​ப​திவு செய்​யும் வசதி உள்​ளது. அதன்​படி, தீபாவளி பண்​டிகைக்​கான டிக்​கெட் முன்​ப​திவு கடந்த ஆக.17 முதல் 20-ம் தேதி வரை நடை​பெற்​றது. தென் மாவட்​டங்​களுக்கு புறப்​படும் நெல்​லை, கன்​னி​யாகுமரி, பாண்​டியன், பொதி​கை, முத்​துநகர் உள்ளிட்ட முக்​கிய ரயில்​களில் 2-ம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளில் டிக்கெட்டுகள் சில நிமிடங்​களில் விற்று தீர்ந்​தன.


குறிப்​பாக, பாண்​டியன், நெல்​லை, பொதிகை ஆகிய ரயில்​களில் 2-ம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்​களில் முடிந்​தது. காத்​திருப்​போர் பட்​டியலும் முடிந்து “ரெக்​ரெட்” என்று காட்​டியது. இதே​போல, மேற்கு மாவட்​டங்​களுக்​குச் செல்​லும் சேரன், நீல​கிரி உள்​ளிட்ட ரயில்​களி​லும், பகலில் இயக்​கப்​படும் வைகை, பல்​ல​வன் விரைவு ரயில்​களி​லும் டிக்​கெட் முன்​ப​திவு முடிந்து காத்​திருப்​போர் எண்​ணிக்கை நீண்​டது.


ரயில் டிக்​கெட் முன்​ப​திவை பொருத்​தவரை 82 சதவீதத்​துக்​கும் மேல் இணை​யதளம் வாயி​லாக​வும், மீத​முள்ள டிக்​கெட் முன்​ப​திவு ரயில் நிலைய கவுன்ட்​டர்​கள் மூல​மாக​வும் நடை​பெற்​றது. குறிப்​பாக, முன்​ப​திவு டிக்​கெட் பெற ரயில் நிலை​யத்​தில் உள்ள கவுன்ட்​டர்​களில் அதி​காலை முதல் நெடுநேரம் காத்​திருந்த பயணி​கள், டிக்​கெட் கிடைக்​காமல் ஏமாற்​றமடைந்​தனர். இதையடுத்​து, மக்​கள் சிறப்பு ரயில்​களை எதிர்​பார்த்து காத்​திருக்​கின்​றனர்.


பண்​டிகை சிறப்பு ரயில்​களை தாமத​மாக அறி​வித்​தால், பயணி​கள் சொந்த ஊர்​களுக்கு பயணிக்க திட்​ட​மிடு​வது கடின​மாகிறது. அதாவது, ரயில்​களில் கூட்ட நெரிசலும், அதிக கட்​ட​ணம் செலுத்​தும் நிலை​யும் ஏற்​படு​கிறது. எனவே, பயணி​களின் சிரமத்​தைக் குறைக்​கும் வித​மாக, சிறப்பு ரயில்​களை ரயில்வே நிர்​வாகம் முன்​ன​தாகவே அறிவிக்க பல்​வேறு தரப்​பினர் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%