
நமது மூளை இயக்கம் நல்ல ஊக்கம் பெற்று இயங்கினால் நமது வாழ்வு இன்னும் சிறக்கும். அதற்கான சின்னச் சின்ன வழிகள் ஏராளம் உள்ளன.
முதலில் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தால் அதுவே முதல் படியாகும். மூளை என்பது ஒரு அடர்ந்த காடு போல. அங்கே அபூர்வமான உயிர் காக்கும் மூலிகைகள் உள்ளன. ஆகவே அவற்றை முதலில் நாம் இனம் காண வேண்டும். பின்னர் அவற்றைப் பயன்படுத்தலாம்.
மூளையில் நூறாயிரம் ப்ளஸ் ப்ளஸ் ப்ளஸ் .... எண்ணற்ற நியூரான்கள் உள்ளன. அவற்றின் செயல் திறம் மலைக்க வைக்கும். ஆகவே மூளையைப் பற்றி முதலில் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
மூளை ஒருவரின் எடையில் சுமார் 2 விழுக்காடு அளவே தான் உள்ளது. ஆனால் அது 20 விழுக்காடு ஆக்ஸிஜனையும் ஊட்டச்சத்தையும் எடுத்துக் கொள்கிறது. ஆகவே அதை நலம் பெற, இயங்க வைக்க இந்த ஊட்டச்சத்தைத் தவறாது அளிக்க வேண்டும்.
முதலில் தேவையற்ற உணவு வகைகளை எடுத்துக் கொண்டு அதை 'நோக அடிக்கக்’ கூடாது. ஆகவே ஊட்டச்சத்து பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு அவற்றை நமது சமச்சீர் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூளை நமது உடல் அங்கங்களில் முக்கியமான பகுதி. ஆகவே உடல் பயிற்சி செய்யும் போது அதுவும் நன்மை அடைகிறது. ஆகவே உடல்பயிற்சியை ஒரு போதும் விடக்கூடாது. நடைப்பயிற்சியால் உடல் நலம் பெறும் என்றால் மூளையும் அதில் அடங்கியது என்பதால் மூளையும் வலிமை பெறும் ஒரு பெரிய ரகசியம் எண்ணங்களைப் பற்றியது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?