தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு மட்டுமான கருவி இல்லை; எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன. 8) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற UmagineTN-2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து, உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைத்து வரக்கூடிய Umagine-இன் நான்காவது மாநாட்டை தொடங்கி வைப்பதில் நான் பெருமை அடைகிறேன். சொல்லும்போதே தெரியும்! நாம் ஆட்சிக்கு வந்த பிறகு தான், இந்த மாநாட்டை நடத்தத் தொடங்கினோம். அது இன்றைக்கு மிகப் பிரமாண்டமாக நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிப் பயணத்தில், ஒரு முக்கியமான தருணமாக இந்த இரண்டு நாள் மாநாடு அமையும் என்று நான் நம்புகிறேன். இன்றும், நாளையும் நடைபெற இருக்கின்ற மாநாடு.
எந்தெந்த தலைப்பில் ‘செஷன்’ ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று பார்த்தேன். கடைக்கோடி பகுதியையும், டிஜிட்டல் ஹெல்த்-கேர் மூலமாக சென்றடைவது - கேமிங் துறையில் தமிழ்நாட்டை முக்கிய மையமாக முன்னேற்றுவது - வாட்சாப் கவர்னென்ஸ் தொடக்கம் - அறம், பரிவு மற்றும் ஏ.ஐ. - தொழில்நுட்பப் புரட்சியை பெண்கள் வழிநடத்துவது - இப்படி பல தலைப்புகள்! அனைத்தும் தற்காலத்திற்கு தேவையானதாக, மிகவும் ரெலவன்டாக இருக்கிறது!
தொழில்நுட்ப வளர்ச்சியில், தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு படி முன்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்! அதை நிறைவேற்றுவது போல, இந்த மாநாடு அமைந்திருக்கிறது!
நவீனத்தை நோக்கிய பாய்ச்சல் - சமூக சமநிலை - அனைவருக்குமான வளர்ச்சி என்று திராவிட மாடல் அரசின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் வகையில் “UMAGINE TN 2026” மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கும் நம்முடைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?