நிலவுப்பேரரசி

நிலவுப்பேரரசி


என் மௌனத்தின் மொழி பெயர்ப்பாளன் அவன்! 

என் மௌன மொழிகளின்

 புரிதல் அவன்!  

நான் காட்டும் மௌனத்தின் நம்பிக்கை அவன்! 

பேசத் தெரியாதவள் நானில்லை! 


என் மௌனமே 

எனது பேரன்பையும்

எனது 

குணநலன்களையும்

 என்னவனுக்கு எடுத்துரைக்கும்போது- 


மணிக்கணக்கில்

 நான் வாதாடவோ-

 எனது மன ஏக்கங்களை

  அவனிடம் எடுத்துரைக்கவோ- 

அதற்கான வாய்ப்பை

 என்னவன் என்னிடம் என்றுமே அளித்ததில்லை!


ஏனென்றால்-

 என் மாபெரும் புரிதலே

 அவனான பொழுது 

பின்பு-

 அகங்காரமோ

    ஆணவமோ

 எனக்கெதற்கு?! 


எத்தனையோ பேர்

 எனக்கு எதுவுமே

 எழுதத் தெரியாதென்று

  கூறுவதுண்டு! 

   ஆம்-

   அவர்கள் கூறுவதும்

      உண்மைதான்! 


என்னவனைத் தவிர

 நான் இதுவரை

 எதுவுமே 

எழுதியதில்லையே! 

அவனது

 இதயப்பலகையில்- 

  எனது விழிகளால்

 எழுதியதைத் தவிர 

எனக்கு எதுவுமே 

 எழுதத் தெரியாதுதான்! 


வானத்தில்

எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்கள்

 வைரம் போல்

 மின்னி மின்னிக் கண் சிமிட்டலாம்! 


ஒற்றை நிலவு நான் 

என்னில் தேய்வதும் வளர்வதும் போல்

  குறைகள் பல உண்டுதான்! 


இருப்பினும்-

 அவன் இதய மண்டலத்தில்

 உலா வரும்

ஒற்றை நிலவுப் பேரரசி நான்தானே!


சில அன்னப்பறவைகளே புறாக்களே- 

இதையு(இதய) மற்றவர்களுக்குத் 

தூதாகக் கொண்டு

 சேர்த்து விடுங்கள்! 


இதையும் அவர்கள்- 

 பலவாறு விமர்சிக்கலாம்! 

நம்மைப் படைத்த

 இறைவனையே

 தூற்றும் இவ்வுலகத்தில் 

நான் மட்டும் எம்மாத்திரம்?!


 கோவைக்கவி புவனா

    கோயமுத்தூர்



 கோவைக்கவி புவனா 

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%