பாஸ்டேக்: கேஒய்சி நடைமுறை ரத்து

பாஸ்டேக்: கேஒய்சி நடைமுறை ரத்து



சென்னை: பாஸ்டேக் பெறும் விதிகளில் இருந்த கேஒய்சி நடைமுறை பிப்ரவரி 1 முதல் ரத்து செய்யப் படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்து உள்ளது. கார்கள், ஜீப்புகள், வேன்கள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான பாஸ்டேக் பெறும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாஸ்டேக் செயல்படுத்திய பிறகு கேவைசி நடை முறையால் ஏற்படும் தாமதம், சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. புதிய பாஸ்டேக் வழங்கும் முன்பு வங்கிகள் வாஹன் தரவு தளத்தில் வாக னங்களின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைனில் வாங்கப்படும் பாஸ் டேக்களுக்கும் வாஹன் தரவு தளத்தில் வாகன விவ ரங்களை சரிபார்க்க வேண்டும். புதிய நடைமுறை மூலம் பாஸ்டேக் பெறுவது மிக எளிமையாகவும் வசதியாக வும் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%