புரிந்து நட மனிதா

புரிந்து நட மனிதா



   " கதிரவனுக்கு ஓய்வு

     தலைக்காட்ட

     அவசியமில்லை

     கனமழை

     மேகமூட்டம்..."


      மழைச் சிதறலில்

      தெரிக்குது மனம்

      பசுமையின் வீரம்

      மனங்களின் தாகம் ..."


     இயற்கையின் ஏக்கம்

     அதில் எழும்

     சங்கீத நாதம் .... "


     மரங்களின் சங்கமம்

     பறவைகளின்

     சுதந்திரம்...."


     பொங்கி எழும்

     சில்லென்ற காற்று

     விலங்குகளுக்கும்

     பறவைகளுக்கும்

     விடுதலை .... "


     சுயநல மனிதனுக்கு

     மட்டும் பெருந்தடை

     இயற்கையை

     நேசித்து விடு ..."


      தூய காற்றை

      சுவாசித்திடு

      மனிதா வேண்டாம்

      சுயநலம்...."


      நீயும் சுதந்திரமாய்

      விடுதலை பெற்று

      வாழ்ந்திடு பிறரை

      வாழ விடு .... "


     உலகம் உனக்கு

     மட்டும் அல்ல

     அனைவருக்கும்

     சொந்தம் என்பதை

     புரிந்து நட ..."


  - சீர்காழி. ஆர். சீதாராமன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%